கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
FOR THIS ONLINE TEST-CLICK HERE
கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

பொருள் : கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: கற்க-கற்றுக் கொள்க; கசடற-பழுதற; கற்பவை-கற்க வேண்டியவை; கற்றபின்-கற்றபின்பு; நிற்க-ஒழுகுக; அதற்கு-அதற்கு; தக-பொருந்த.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு

பொருள் : எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

அருஞ்சொற்பொருள்:  எண்-கணிதம்; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); ஏனை-மற்றும்; எழுத்து-எழுதப்படுவது, இலக்கண இலக்கிய அறிவு; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); இவ்விரண்டும்-இவை இரண்டும்; கண்-விழி; என்ப-என்று சொல்லுவர் (உயர்திணைப் பன்மைவினை); வாழும்-வாழும், சிறப்புடைய; உயிர்க்கு-உயிருக்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

பொருள் : கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

அருஞ்சொற்பொருள்: கண்-விழி; உடையர்-பெற்றுள்ளவர்; என்பவர்-என்று சொல்லப்படுபவர்; கற்றோர்-கல்வி பெற்றவர்; முகத்து-முகத்தின்கண்; இரண்டு-இரண்டு; புண்-வடு; உடையர்-பெற்றுள்ளவர்; கல்லாதவர்-கல்வி அறிவு பெறாதவர்கள்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

பொருள் : மகிழும்படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

அருஞ்சொற்பொருள்:  உவப்ப-மகிழ; தலைக்கூடி-கலந்து பழகி; உள்ள-நினைக்க; பிரிதல்-நீங்குதல்; அனைத்தே-போலுமே, அளவே, அத்தன்மைத்தே, என்ற பொருள்களுள் அத்தன்மைத்தே இங்கு பொருத்தம்; புலவர்-கற்பிக்கும் ஆசிரியர் (அறிஞர், கற்றறிந்தார் எனவும் பொருள் கூறுவர்; தொழில்-தொழில் (செயல், இயல்பு, பண்பு, வேலை எனவும் பொருள் கொள்வர்)

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்

பொருள் : செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

அருஞ்சொற்பொருள்: உடையார்-உடையவர். இங்கு செல்வம் உடையவர் எனக் கொள்வர்; முன்-எதிரில்; இல்லார்போல்-இல்லாதவர் போல. இங்கு செல்வம் இல்லாதவர் அதாவது வறியர் எனக் கொள்ளப்படும்; ஏக்கற்றும்-ஆசையால் தாழ்ந்தும்; கற்றார்-கல்வி பெற்றவர்; கடையரே-இழிந்தவரே என்றும் இடத்தவரே என்றும் இருவிதமாகப் பொருள் காண்பர்; கல்லாதவர்-கல்வி பெறாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

பொருள் : மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

அருஞ்சொற்பொருள்: தொட்ட-தோண்டிய; அனைத்து-அளவுக்கு; ஊறும்-சுரக்கும்; மணல்-மணல்; கேணி-கிணறு. மாந்தர்க்கு-மக்களுக்கு; கற்ற-ஓதிய; அனைத்து-அவ்வளவு; ஊறும்-பெருகும்; அறிவு-அறிவு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

பொருள் : கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

அருஞ்சொற்பொருள்: யாதானும்-எதுவேனும்; நாடாமால்-நாடாகுமே; ஊராமால்-ஊராகுமே; என்-எதனால்? (எது கருதி); ஒருவன்-ஒருவன்; சாம்-இறக்கும்; துணையும்-அளவும்; கல்லாதவாறு-கல்லாமல் இருப்பது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

பொருள் : ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

அருஞ்சொற்பொருள்: ஒருமைக்கண்-ஒருமைப்பாட்டுடன்; தான்-தான்; கற்றகல்வி-கற்றுத் தேர்ந்த அறிவு; ஒருவற்கு-ஒருவர்க்கு; எழுமையும்-பல காலம்; ஏமாப்பு-பாதுகாப்பு, உதவுதல்; உடைத்து-உடையது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

பொருள் :  தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

அருஞ்சொற்பொருள்: தாம்-தாங்கள்; இன்புறுவது-மகிழ்ச்சி அடைவது; உலகு-உலகம்; இன்புறக்கண்டு-இன்பம் எய்துவது உணர்ந்து; காமுறுவர்-மிகுந்த காதல் கொள்வர், மேன்மேலும் விரும்புவர்; கற்றுஅறிந்தார்-கல்வி அறிவு பெற்றார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

பொருள் :  ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

அருஞ்சொற்பொருள்: கேடில்-அழிவில்லாத; விழுச்செல்வம்-மதிப்புமிகு செல்வம்; கல்வி-கற்றல் (கல்வி அறிவு பெறுதல்); ஒருவற்கு-ஒருவனுக்கு. மாடல்ல-உடைமையல்ல; மற்றையவை-பிற எல்லாம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘


கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


Telegram Logo GIF கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
FOR THIS ONLINE TEST-CLICK HERE
கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

பொருள் : கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

அருஞ்சொற்பொருள்: கற்க-கற்றுக் கொள்க; கசடற-பழுதற; கற்பவை-கற்க வேண்டியவை; கற்றபின்-கற்றபின்பு; நிற்க-ஒழுகுக; அதற்கு-அதற்கு; தக-பொருந்த.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு

பொருள் : எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

அருஞ்சொற்பொருள்:  எண்-கணிதம்; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); ஏனை-மற்றும்; எழுத்து-எழுதப்படுவது, இலக்கண இலக்கிய அறிவு; என்ப-என்று சொல்லப்படுபவை (அஃறிணைப் பன்மைப் பெயர்); இவ்விரண்டும்-இவை இரண்டும்; கண்-விழி; என்ப-என்று சொல்லுவர் (உயர்திணைப் பன்மைவினை); வாழும்-வாழும், சிறப்புடைய; உயிர்க்கு-உயிருக்கு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்

பொருள் : கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே; கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.

அருஞ்சொற்பொருள்: கண்-விழி; உடையர்-பெற்றுள்ளவர்; என்பவர்-என்று சொல்லப்படுபவர்; கற்றோர்-கல்வி பெற்றவர்; முகத்து-முகத்தின்கண்; இரண்டு-இரண்டு; புண்-வடு; உடையர்-பெற்றுள்ளவர்; கல்லாதவர்-கல்வி அறிவு பெறாதவர்கள்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

பொருள் : மகிழும்படியாகக் கூடிப் பழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.

அருஞ்சொற்பொருள்:  உவப்ப-மகிழ; தலைக்கூடி-கலந்து பழகி; உள்ள-நினைக்க; பிரிதல்-நீங்குதல்; அனைத்தே-போலுமே, அளவே, அத்தன்மைத்தே, என்ற பொருள்களுள் அத்தன்மைத்தே இங்கு பொருத்தம்; புலவர்-கற்பிக்கும் ஆசிரியர் (அறிஞர், கற்றறிந்தார் எனவும் பொருள் கூறுவர்; தொழில்-தொழில் (செயல், இயல்பு, பண்பு, வேலை எனவும் பொருள் கொள்வர்)

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்

பொருள் : செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

அருஞ்சொற்பொருள்: உடையார்-உடையவர். இங்கு செல்வம் உடையவர் எனக் கொள்வர்; முன்-எதிரில்; இல்லார்போல்-இல்லாதவர் போல. இங்கு செல்வம் இல்லாதவர் அதாவது வறியர் எனக் கொள்ளப்படும்; ஏக்கற்றும்-ஆசையால் தாழ்ந்தும்; கற்றார்-கல்வி பெற்றவர்; கடையரே-இழிந்தவரே என்றும் இடத்தவரே என்றும் இருவிதமாகப் பொருள் காண்பர்; கல்லாதவர்-கல்வி பெறாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.

பொருள் : மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

அருஞ்சொற்பொருள்: தொட்ட-தோண்டிய; அனைத்து-அளவுக்கு; ஊறும்-சுரக்கும்; மணல்-மணல்; கேணி-கிணறு. மாந்தர்க்கு-மக்களுக்கு; கற்ற-ஓதிய; அனைத்து-அவ்வளவு; ஊறும்-பெருகும்; அறிவு-அறிவு.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு

பொருள் : கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

அருஞ்சொற்பொருள்: யாதானும்-எதுவேனும்; நாடாமால்-நாடாகுமே; ஊராமால்-ஊராகுமே; என்-எதனால்? (எது கருதி); ஒருவன்-ஒருவன்; சாம்-இறக்கும்; துணையும்-அளவும்; கல்லாதவாறு-கல்லாமல் இருப்பது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து

பொருள் : ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

அருஞ்சொற்பொருள்: ஒருமைக்கண்-ஒருமைப்பாட்டுடன்; தான்-தான்; கற்றகல்வி-கற்றுத் தேர்ந்த அறிவு; ஒருவற்கு-ஒருவர்க்கு; எழுமையும்-பல காலம்; ஏமாப்பு-பாதுகாப்பு, உதவுதல்; உடைத்து-உடையது.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்

பொருள் :  தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

அருஞ்சொற்பொருள்: தாம்-தாங்கள்; இன்புறுவது-மகிழ்ச்சி அடைவது; உலகு-உலகம்; இன்புறக்கண்டு-இன்பம் எய்துவது உணர்ந்து; காமுறுவர்-மிகுந்த காதல் கொள்வர், மேன்மேலும் விரும்புவர்; கற்றுஅறிந்தார்-கல்வி அறிவு பெற்றார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

பொருள் :  ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

அருஞ்சொற்பொருள்: கேடில்-அழிவில்லாத; விழுச்செல்வம்-மதிப்புமிகு செல்வம்; கல்வி-கற்றல் (கல்வி அறிவு பெறுதல்); ஒருவற்கு-ஒருவனுக்கு. மாடல்ல-உடைமையல்ல; மற்றையவை-பிற எல்லாம்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘


கல்வி-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page