FOR THIS ONLINE TEST-CLICK HERE
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்
பொருள் : அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: அருஞ்சொற்பொருள்: அறன்-நல்வினை; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பொருள் : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: உற்ற-நேர்ந்த; நோய்துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வாராவண்ணம்; முன் -(வரு)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி, உவப்பன செய்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பொருள் : பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
அருஞ்சொற்பொருள்: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி, நலன்பாராட்டி, உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை
பொருள் : தம்மை விட, (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
அருஞ்சொற்பொருள்: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
பொருள் : தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்
பொருள் : தக்க பெரியாரின் கூட்டத்தில் வேறுபட்டவனாய்த் தோன்றாதவாறு நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
அருஞ்சொற்பொருள்: தக்கார்-தகுதியுடையர்; இனத்தனாய்-சேர்க்கையுடையவனாய்; தான்-தான்; ஒழுக-நடந்துகொள்ள; வல்லானை-திறமையுடையவனை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்
பொருள் : கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?
அருஞ்சொற்பொருள்: இடிக்கும்-நெருக்கிச் சொல்லும்; துணையாரை-துணையாந் தன்மையுடையவரை; ஆள்வாரை-ஆள்கின்றவரை, உடையவரை; யாரே-எவரே, யார்தான்; கெடுக்கும்-அழிக்கும்; தகைமையவர்-பெருமையுடையவர்
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
பொருள் : கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
அருஞ்சொற்பொருள்: இடிப்பாரை-கடிந்துரைப்பாரை, கழறுதற்கு உரியவரை; இல்லாத-இல்லாத; ஏமரா-காவலற்ற, பாதுகாப்பு இல்லாத, ஏமம் மருவாத; மன்னன்-நாட்டுத் தலைவன்; கெடுப்பார்-கேடு விளைப்பவர்; இலானும்-இல்லையாயினும்; கெடும்-அழியும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை
பொருள் : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
அருஞ்சொற்பொருள்: முதல்-முதற்பொருள்; இலார்க்கு-இல்லாதவர்க்கு; ஊதியம்-வருவாய்; (பேறு, ஆக்கம்); இல்லை-இல்லை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
பொருள் : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
அருஞ்சொற்பொருள்: பல்லார்-பலர், கணக்கற்றவர்; பகை-பகைமை; கொளலின்-கொள்ளுதலைவிட, அடைவதைவிட; பத்து-பதிற்று; அடுத்த-மடங்கான; தீமைத்தே-தீங்குடையதே; நல்லார்-நற்பண்புகள் நிறைந்தவர், பெரியார்; தொடர்-தொடர்பு, நட்பு, உறவு; கைவிடல்-முற்றிலும் நீக்கிவிடல், ஏற்காதொழிதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பெரியாரைத் துணைக்கோடல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
பெரியாரைத் துணைக்கோடல்-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
FOR THIS ONLINE TEST-CLICK HERE
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்
பொருள் : அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: அருஞ்சொற்பொருள்: அறன்-நல்வினை; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு, நட்பு; திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பொருள் : வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: உற்ற-நேர்ந்த; நோய்துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வாராவண்ணம்; முன் -(வரு)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி, உவப்பன செய்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பொருள் : பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
அருஞ்சொற்பொருள்: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி, நலன்பாராட்டி, உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை
பொருள் : தம்மை விட, (அறிவு முதலியவற்றால்) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
அருஞ்சொற்பொருள்: தம்மின்-தம்மைக்காட்டிலும், தம்மைவிட; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தம்மவராக, சுற்றமாக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்; வன்மையுள்-வலிமையுள், வல்லமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை, சிறந்தது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்
பொருள் : தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்
பொருள் : தக்க பெரியாரின் கூட்டத்தில் வேறுபட்டவனாய்த் தோன்றாதவாறு நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.
அருஞ்சொற்பொருள்: தக்கார்-தகுதியுடையர்; இனத்தனாய்-சேர்க்கையுடையவனாய்; தான்-தான்; ஒழுக-நடந்துகொள்ள; வல்லானை-திறமையுடையவனை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்
பொருள் : கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?
அருஞ்சொற்பொருள்: இடிக்கும்-நெருக்கிச் சொல்லும்; துணையாரை-துணையாந் தன்மையுடையவரை; ஆள்வாரை-ஆள்கின்றவரை, உடையவரை; யாரே-எவரே, யார்தான்; கெடுக்கும்-அழிக்கும்; தகைமையவர்-பெருமையுடையவர்
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
பொருள் : கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
அருஞ்சொற்பொருள்: இடிப்பாரை-கடிந்துரைப்பாரை, கழறுதற்கு உரியவரை; இல்லாத-இல்லாத; ஏமரா-காவலற்ற, பாதுகாப்பு இல்லாத, ஏமம் மருவாத; மன்னன்-நாட்டுத் தலைவன்; கெடுப்பார்-கேடு விளைப்பவர்; இலானும்-இல்லையாயினும்; கெடும்-அழியும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை
பொருள் : முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.
அருஞ்சொற்பொருள்: முதல்-முதற்பொருள்; இலார்க்கு-இல்லாதவர்க்கு; ஊதியம்-வருவாய்; (பேறு, ஆக்கம்); இல்லை-இல்லை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
பொருள் : நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.
அருஞ்சொற்பொருள்: பல்லார்-பலர், கணக்கற்றவர்; பகை-பகைமை; கொளலின்-கொள்ளுதலைவிட, அடைவதைவிட; பத்து-பதிற்று; அடுத்த-மடங்கான; தீமைத்தே-தீங்குடையதே; நல்லார்-நற்பண்புகள் நிறைந்தவர், பெரியார்; தொடர்-தொடர்பு, நட்பு, உறவு; கைவிடல்-முற்றிலும் நீக்கிவிடல், ஏற்காதொழிதல்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘