FOR THIS ONLINE TEST-CLICK HERE
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள் : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
அருஞ்சொற்பொருள்: அகழ்வாரை-தோண்டுவாரை; தாங்கும்-சுமக்கும்; நிலம்-நிலம்; போல-ஒக்க; தம்மை-தம்மை; இகழ்வார்-இகழ்பவர்கள்; பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; தலை-முதன்மை, சிறப்பு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று
பொருள் : வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
அருஞ்சொற்பொருள்: பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; இறப்பினை-மிகையை; என்றும்-எப்போதும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
பொருள் : வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
அருஞ்சொற்பொருள்: இன்மையுள்-இல்லாமையிலும்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஒரால்-ஒருவுதல், (ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல். தழுவல் என்பது தழால் என்றாவது போன்று, ஒருவல் என்பது ஒரால் என்றாயிற்று.; வன்மையுள்-வலிமையில்; வன்மை-வலிமை; மடவார்ப் பொறை-அறிவிலிகள் (செய்யும் மிகையைப்) பொறுத்தல்
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
பொருள் : நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: நிறையுடைமை-சால்புடைமை; நீங்காமை-நீங்காமல் இருக்க, விலகாமை; வேண்டின்-விரும்பினால்; பொறையுடைமை-பொறுத்துக்கொள்ளும் தன்மை; போற்றி-காத்து; ஒழுகப்படும்-நடந்து கொள்ளத்தகும், நடந்துகொள்ள வேண்டும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
பொருள் : (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
அருஞ்சொற்பொருள்: ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-ஒரு பொருள் ஆகும்படி; வையாரே-கொள்ளாரே.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
பொருள் : தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
அருஞ்சொற்பொருள்: ஒறுத்தார்க்கு-தண்டித்தவர்க்கு; ஒருநாளை-ஒரு நாள்; இன்பம்-மகிழ்ச்சி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று
பொருள் : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
அருஞ்சொற்பொருள்: திறன்அல்ல–செய்யத்தகாதவைகளை, முறையல்லாதவை; தன்பிறர்-தன்கண் மற்றவர், தமக்குப் பிறர்; செய்யினும்-செய்தாலும்; நோ-துன்பம்; நொந்து-வருந்தி; அறன்அல்ல–அறமல்லாதவற்றை, நற்செயல் அல்லாதவைகளை; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: மிகுதியான்-மனச் செருக்கால்; மிக்கவை-தீங்குகள்; செய்தாரை-செய்தவரை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்
பொருள் : வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
அருஞ்சொற்பொருள்: துறந்தாரின்-பற்றற்றவர் போல; தூய்மை-நன்மை; உடையார்-பெற்றுள்ளார்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
பொருள் : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
அருஞ்சொற்பொருள்: உண்ணாது-ஊனைத் தவிர்த்து; நோற்பார்-பொறுப்பவர்; பெரியர்-பெருமையுடையவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
பொறையுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
பொறையுடைமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️
FOR THIS ONLINE TEST-CLICK HERE
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
பொருள் : தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம்போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.
அருஞ்சொற்பொருள்: அகழ்வாரை-தோண்டுவாரை; தாங்கும்-சுமக்கும்; நிலம்-நிலம்; போல-ஒக்க; தம்மை-தம்மை; இகழ்வார்-இகழ்பவர்கள்; பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; தலை-முதன்மை, சிறப்பு.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின்று நன்று
பொருள் : வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
அருஞ்சொற்பொருள்: பொறுத்தல்-பொறுத்துக் கொள்ளுதல்; இறப்பினை-மிகையை; என்றும்-எப்போதும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
பொருள் : வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
அருஞ்சொற்பொருள்: இன்மையுள்-இல்லாமையிலும்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஒரால்-ஒருவுதல், (ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல். தழுவல் என்பது தழால் என்றாவது போன்று, ஒருவல் என்பது ஒரால் என்றாயிற்று.; வன்மையுள்-வலிமையில்; வன்மை-வலிமை; மடவார்ப் பொறை-அறிவிலிகள் (செய்யும் மிகையைப்) பொறுத்தல்
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
பொருள் : நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: நிறையுடைமை-சால்புடைமை; நீங்காமை-நீங்காமல் இருக்க, விலகாமை; வேண்டின்-விரும்பினால்; பொறையுடைமை-பொறுத்துக்கொள்ளும் தன்மை; போற்றி-காத்து; ஒழுகப்படும்-நடந்து கொள்ளத்தகும், நடந்துகொள்ள வேண்டும்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து
பொருள் : (தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
அருஞ்சொற்பொருள்: ஒறுத்தாரை-தண்டித்தவரை; ஒன்றாக-ஒரு பொருள் ஆகும்படி; வையாரே-கொள்ளாரே.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்
பொருள் : தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
அருஞ்சொற்பொருள்: ஒறுத்தார்க்கு-தண்டித்தவர்க்கு; ஒருநாளை-ஒரு நாள்; இன்பம்-மகிழ்ச்சி.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
திறன்அல்ல தன்பிறர் செய்யினும் நோநொந்து
அறன்அல்ல செய்யாமை நன்று
பொருள் : தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால் அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து அறம் அல்லாதவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
அருஞ்சொற்பொருள்: திறன்அல்ல–செய்யத்தகாதவைகளை, முறையல்லாதவை; தன்பிறர்-தன்கண் மற்றவர், தமக்குப் பிறர்; செய்யினும்-செய்தாலும்; நோ-துன்பம்; நொந்து-வருந்தி; அறன்அல்ல–அறமல்லாதவற்றை, நற்செயல் அல்லாதவைகளை; செய்யாமை-செய்யாதிருத்தல்; நன்று-நல்லது, நன்மையுடையது.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
பொருள்: செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்றுவிட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்: மிகுதியான்-மனச் செருக்கால்; மிக்கவை-தீங்குகள்; செய்தாரை-செய்தவரை.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோக்கிற் பவர்
பொருள் : வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ் சொற்களைப் பொறுத்துக் கொள்பவர் துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர்.
அருஞ்சொற்பொருள்: துறந்தாரின்-பற்றற்றவர் போல; தூய்மை-நன்மை; உடையார்-பெற்றுள்ளார்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
பொருள் : உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.
அருஞ்சொற்பொருள்: உண்ணாது-ஊனைத் தவிர்த்து; நோற்பார்-பொறுப்பவர்; பெரியர்-பெருமையுடையவர்.
⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ●۩۞۩● ••══●•⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘