கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
FOR THIS ONLINE TEST-CLICK HERE
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்

பொருள்:  அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: அரங்கு-சதுக்கம். சதுரங்கப்பலகை; இன்றி-இல்லாமல்; வட்டு-உண்டை; ஆடி-விளையாடி; அற்றே-அத்தன்மைத்தே.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்றற்று

பொருள்: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: கல்லாதான்-படிக்காதவன்; சொல்-மொழி; காமுறுதல்-விரும்புதல்; முலை-கொங்கை; இரண்டும்-இரண்டும்; இல்லாதாள்-இல்லாதவள்; பெண்-பெண்மை; காமுற்று-விரும்பினால்; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்

பொருள்:  கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

அருஞ்சொற்பொருள்: கல்லாதவரும்-ஓதாதவரும்; நனி-மிக; நல்லர்-நன்மையுடையார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அருஞ்சொற்பொருள்: கல்லாதான்-கல்வி பெறாதவன், ஓதாதவன்; ஒட்பம்-இயற்கைஅறிவு, நுண்ணறிவு, அறிவுடைமை; கழிய-மிக; நன்று-நல்லது, நன்மையுடையது; ஆயினும்-ஆனாலும்; கொள்ளார்-ஒப்பமாட்டார்; அறிவுடையார்-அறிவுடையவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்

பொருள்:  கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

அருஞ்சொற்பொருள்: கல்லா-கற்காத; ஒருவன்-ஒருவன்; தகைமை-மதிப்பு

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்

பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்

அருஞ்சொற்பொருள்: உளர்- இருக்கின்றனர்; என்னும்-என்கின்ற; மாத்திரையர்-அளவினர்; அல்லால்-அன்றி; பயவாக் களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம்; அனையர்-ஒப்பர்; கல்லாதவர்-கல்லாதவர், கல்வியறிவு இல்லாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

அருஞ்சொற்பொருள்: நுண்-நுட்பமான; மாண்-மாட்சிமைப்பட்ட; நுழைபுலம்–நுணுகிச் சென்ற அறிவு, ஆராய்ந்து பார்க்கும் அறிவு; இல்லான்-இல்லாதவனது; எழில்நலம்-அழகு, தோற்றப் பொலிவு, எழுச்சி, கம்பீரத்தோற்றம்; மண்-மண்; மாண்-சிறந்த; புனை-அலங்காரம் செய்த; பாவை-பதுமை, பொம்மை; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

பொருள்:  கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.

அருஞ்சொற்பொருள்: நல்லார்கண்-கற்றார் மாட்டு; பட்ட-நின்ற; வறுமையின்-ஏழ்மையைவிட; இன்னாதே-தீதே.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு

பொருள்:  கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

அருஞ்சொற்பொருள்: மேற்பிறந்தார்-உயர்குடியில் பிறந்தவர்; ஆயினும்-ஆனாலும்; கல்லாதார்-ஓதாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

பொருள்: அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

அருஞ்சொற்பொருள்: விலங்கொடு-மிருகங்களோடு(நோக்க) மக்கள்-மாந்தர்; அனையர்-ஒப்பர், வேறுபாடுடையவர்; இலங்குநூல்-விளங்கிய நூல், அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; கற்றாரோடு-ஓதியவரை நோக்க; ஏனையவர்-மற்றவர்கள்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘


கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


Telegram Logo GIF கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST
FOR THIS ONLINE TEST-CLICK HERE
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய

நூல்இன்றிக் கோட்டி கொளல்

பொருள்:  அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: அரங்கு-சதுக்கம். சதுரங்கப்பலகை; இன்றி-இல்லாமல்; வட்டு-உண்டை; ஆடி-விளையாடி; அற்றே-அத்தன்மைத்தே.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்றற்று

பொருள்: (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

அருஞ்சொற்பொருள்: கல்லாதான்-படிக்காதவன்; சொல்-மொழி; காமுறுதல்-விரும்புதல்; முலை-கொங்கை; இரண்டும்-இரண்டும்; இல்லாதாள்-இல்லாதவள்; பெண்-பெண்மை; காமுற்று-விரும்பினால்; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்

சொல்லாது இருக்கப் பெறின்

பொருள்:  கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.

அருஞ்சொற்பொருள்: கல்லாதவரும்-ஓதாதவரும்; நனி-மிக; நல்லர்-நன்மையுடையார்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்

கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்.

அருஞ்சொற்பொருள்: கல்லாதான்-கல்வி பெறாதவன், ஓதாதவன்; ஒட்பம்-இயற்கைஅறிவு, நுண்ணறிவு, அறிவுடைமை; கழிய-மிக; நன்று-நல்லது, நன்மையுடையது; ஆயினும்-ஆனாலும்; கொள்ளார்-ஒப்பமாட்டார்; அறிவுடையார்-அறிவுடையவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்

பொருள்:  கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு (கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.

அருஞ்சொற்பொருள்: கல்லா-கற்காத; ஒருவன்-ஒருவன்; தகைமை-மதிப்பு

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்

பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும் அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு ஒப்பாவர்

அருஞ்சொற்பொருள்: உளர்- இருக்கின்றனர்; என்னும்-என்கின்ற; மாத்திரையர்-அளவினர்; அல்லால்-அன்றி; பயவாக் களர்-விளைவுக்குப் பயன்படாத உவர் நிலம்; அனையர்-ஒப்பர்; கல்லாதவர்-கல்லாதவர், கல்வியறிவு இல்லாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவை அற்று

பொருள்: நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப் புனையப்பட்ட பாவை போன்றது.

அருஞ்சொற்பொருள்: நுண்-நுட்பமான; மாண்-மாட்சிமைப்பட்ட; நுழைபுலம்–நுணுகிச் சென்ற அறிவு, ஆராய்ந்து பார்க்கும் அறிவு; இல்லான்-இல்லாதவனது; எழில்நலம்-அழகு, தோற்றப் பொலிவு, எழுச்சி, கம்பீரத்தோற்றம்; மண்-மண்; மாண்-சிறந்த; புனை-அலங்காரம் செய்த; பாவை-பதுமை, பொம்மை; அற்று-அத்தன்மைத்து.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட்ட திரு

பொருள்:  கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.

அருஞ்சொற்பொருள்: நல்லார்கண்-கற்றார் மாட்டு; பட்ட-நின்ற; வறுமையின்-ஏழ்மையைவிட; இன்னாதே-தீதே.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு

பொருள்:  கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

அருஞ்சொற்பொருள்: மேற்பிறந்தார்-உயர்குடியில் பிறந்தவர்; ஆயினும்-ஆனாலும்; கல்லாதார்-ஓதாதவர்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

பொருள்: அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

அருஞ்சொற்பொருள்: விலங்கொடு-மிருகங்களோடு(நோக்க) மக்கள்-மாந்தர்; அனையர்-ஒப்பர், வேறுபாடுடையவர்; இலங்குநூல்-விளங்கிய நூல், அறிவு விளக்கத்துக்குக் காரணமான நூல்கள்; கற்றாரோடு-ஓதியவரை நோக்க; ஏனையவர்-மற்றவர்கள்.

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘


கல்லாமை-திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page