ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


ஒழுக்கமுடைமை THIRUKKURAL TNPSC MYGURUPLUS ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

பொருள் :  ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கம்-ஒழுக்கமுடைமை; விழுப்பம்-விழுமம், மேன்மை, சிறப்பு; தரலான்-கொடுப்பதால்; ஒழுக்கம்-நடத்தை; உயிரினும்-உயிரைக் காட்டிலும்; ஓம்பப்படும்-காப்பற்றத் தகும்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை

பொருள் : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

அருஞ்சொற்பொருள்: பரிந்து-வருந்தி, விரும்பி; ஓம்பி-பேணி, போற்றி; காக்க-பாதுகாக்க, காப்பாற்றுக; ஒழுக்கம்-நன்னடத்தை; தெரிந்து-அறிந்து; ஓம்பி-ஒருமனப்பட்டு, மனத்தை ஒருக்கி; தேரினும்-ஆராய்ந்தாலும்; அஃதே-அதுவே; துணை-உதவி.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

பொருள் : ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கம்-(நல்ல) நடத்தை; உடைமை-உடையனாந்தன்மை; குடிமை-நற்குடித் தன்மை, உயர்ந்த குடிப்பிறப்பு; இழுக்கம்-பிழை, தவறுதல்; இழிந்த-தாழ்ந்த; பிறப்பாய்-பிறப்பாகி; விடும்-விடும்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

பொருள் : கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

அருஞ்சொற்பொருள்:  மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொருள் : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

அருஞ்சொற்பொருள்: அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; உடையான்கண்-உடையவனிடத்தில்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; போன்று-போல.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து

பொருள் : ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினின்றும்; ஒல்கார்-தளரார்; உரவோர்-திண்மையுடையவர்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி

பொருள் : ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

பொருள் : நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

அருஞ்சொற்பொருள்: நன்றிக்கு-நன்மைக்கு; வித்து-விதை, விரை, காரணம்; ஆகும்-ஆகும்; நல்லொழுக்கம்-நல்ல ஒழுக்கம், நல்ல நடத்தை; தீயொழுக்கம்-கொடிய ஒழுக்கம், தீய ஒழுக்கம்; என்றும்-எப்போதும், எந்நாளும்; இடும்பை-துன்பம்; தரும்-பயக்கும்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்

பொருள் : தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்

அருஞ்சொற்பொருள்:  ஒழுக்கம்-நன்னடத்தை; உடையவர்க்கு-பெற்றுள்ளவருக்கு; ஒல்லாவே-முடியாதே அல்லது பொருந்தாதே; தீய-கொடிய, தீமையானவை ; வழுக்கியும்-தவறியும்; வாயால்-வாயினால்; சொலல்-சொல்லுதல்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

பொருள் : உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

அருஞ்சொற்பொருள்: உலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்கள்.

 

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST


Telegram Logo GIF ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

DOWNLOAD OUR OFFICIAL APP FROM PLAYSTORE⬇️


ஒழுக்கமுடைமை THIRUKKURAL TNPSC MYGURUPLUS ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

FOR THIS ONLINE TEST-CLICK HERE


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்

பொருள் :  ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கம்-ஒழுக்கமுடைமை; விழுப்பம்-விழுமம், மேன்மை, சிறப்பு; தரலான்-கொடுப்பதால்; ஒழுக்கம்-நடத்தை; உயிரினும்-உயிரைக் காட்டிலும்; ஓம்பப்படும்-காப்பற்றத் தகும்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்

தேரினும் அஃதே துணை

பொருள் : ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

அருஞ்சொற்பொருள்: பரிந்து-வருந்தி, விரும்பி; ஓம்பி-பேணி, போற்றி; காக்க-பாதுகாக்க, காப்பாற்றுக; ஒழுக்கம்-நன்னடத்தை; தெரிந்து-அறிந்து; ஓம்பி-ஒருமனப்பட்டு, மனத்தை ஒருக்கி; தேரினும்-ஆராய்ந்தாலும்; அஃதே-அதுவே; துணை-உதவி.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்

பொருள் : ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கம்-(நல்ல) நடத்தை; உடைமை-உடையனாந்தன்மை; குடிமை-நற்குடித் தன்மை, உயர்ந்த குடிப்பிறப்பு; இழுக்கம்-பிழை, தவறுதல்; இழிந்த-தாழ்ந்த; பிறப்பாய்-பிறப்பாகி; விடும்-விடும்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

பொருள் : கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

அருஞ்சொற்பொருள்:  மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘ 

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

பொருள் : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

அருஞ்சொற்பொருள்: அழுக்காறு-பிறர் ஆக்கம் பொறாமை; உடையான்கண்-உடையவனிடத்தில்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; போன்று-போல.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து

பொருள் : ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினின்றும்; ஒல்கார்-தளரார்; உரவோர்-திண்மையுடையவர்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி

பொருள் : ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

அருஞ்சொற்பொருள்: ஒழுக்கத்தின்-ஒழுக்கத்தினால்; எய்துவர்-அடைவராவர்; மேன்மை-உயர்வு; இழுக்கத்தின்-தவறுதலால்; எய்துவர்-அடைவர்; எய்தா-அடைவதற்கு உரித்தல்லாத; பழி-பழிக்கப்படுதல்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்

பொருள் : நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

அருஞ்சொற்பொருள்: நன்றிக்கு-நன்மைக்கு; வித்து-விதை, விரை, காரணம்; ஆகும்-ஆகும்; நல்லொழுக்கம்-நல்ல ஒழுக்கம், நல்ல நடத்தை; தீயொழுக்கம்-கொடிய ஒழுக்கம், தீய ஒழுக்கம்; என்றும்-எப்போதும், எந்நாளும்; இடும்பை-துன்பம்; தரும்-பயக்கும்

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய

வழுக்கியும் வாயால் சொலல்

பொருள் : தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்

அருஞ்சொற்பொருள்:  ஒழுக்கம்-நன்னடத்தை; உடையவர்க்கு-பெற்றுள்ளவருக்கு; ஒல்லாவே-முடியாதே அல்லது பொருந்தாதே; தீய-கொடிய, தீமையானவை ; வழுக்கியும்-தவறியும்; வாயால்-வாயினால்; சொலல்-சொல்லுதல்.

 ⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்

பொருள் : உலகத்தாரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

அருஞ்சொற்பொருள்: உலகத்தோடு-உலகத்துடன்; ஒட்ட-பொருந்த; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; பலகற்றும்-பலவற்றைக் கற்றுத் தேர்ந்திருந்தாலும்; கல்லார்-அறியார்; அறிவிலாதார்-அறிவில்லாதவர்கள்.

 

⫘⫘⫘⫘⫘⫘⫘⫘⫘••●══•• ۩۞۩ ••══●⫘⫘⫘⫘⫘⫘⫘⫘

ஒழுக்கமுடைமை -திருக்குறள் TNPSC THIRUKKURAL PDF NOTES AND TEST

Please disable your adblocker this site!

DOWNLOAD OUR OFFICIAL APP

X

You cannot copy content of this page